4,611 புதிய நேர்வுகள் – மே நடுப்பகுதியில் இருந்து மிகக் குறைவான எண்ணிக்கை

கோவிட் 19 | இன்று நாட்டில், 4,611 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 69 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,477 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,439 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 452 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,346), சரவாக் (682), பேராக் (453), நெகிரி செம்பிலான் (437), ஜொகூர் (314), கோலாலம்பூர் (310), கிளந்தான் (219), மலாக்கா (205), கெடா (182), சபா (166), லாபுவான் (130), பினாங்கு (84), பஹாங் (50), திரெங்கானு (18), புத்ராஜெயா (15).

மேலும் இன்று, 22 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 14 பணியிடத் திரளைகள் ஆகும்.