5,803 புதிய நேர்வுகள், 81 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 81 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,884 பேர் பலியாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 2,088 மரணங்கள் நேர்ந்துள்ளன.

இதற்கிடையில் இன்று, 5,193 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 435 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,108), நெகிரி செம்பிலான் (741), கோலாலம்பூர் (628), சரவாக் (491), மலாக்கா (355), ஜொகூர் (329), பஹாங் (220), சபா (189), கெடா (186), பினாங்கு (160), பேராக் (137), கிளந்தான் (103), லாபுவான் (99), திரெங்கானு (29), புத்ராஜெயா (24), பெர்லிஸ் (4).

மேலும் இன்று, 14 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.