8,574 புதிய நேர்வுகள், சிலாங்கூரில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் 4,000-க்கும் மேற்பட்ட நேர்வுகள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 8,574 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 102 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,260 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,041 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 452 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 4,308 (290,660), கோலாலம்பூர் – 609 (89,567), ஜொகூர் – 407 (75,235), சபா – 298 (72,611), சரவாக் – 235 (69,104), நெகிரி செம்பிலான் – 794 (53,186), பினாங்கு – 231 (36,850), கிளந்தான் – 133 (36,274), பேராக் – 168 (29,278), கெடா – 415 (28,999), மலாக்கா – 411 (22,286), பஹாங் – 314 (16,462), திரெங்கானு – 140 (11,899), லாபுவான் – 66 (9,207), புத்ராஜெயா – 45 (2,644).

மேலும் இன்று, 16 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.