15,764 புதிய நேர்வுகள், 219 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 15,764 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 219 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,403-ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 11,767 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 532 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6067), கோலாலம்பூர் (1536), ஜொகூர் (1222), சபா (1166), கெடா (1108), நெகிரி செம்பிலான் (862), பேராக் (748), பினாங்கு (667), கிளந்தான் (552), பகாங் (475), மலாக்கா (463), திரெங்கானு (425), சரவாக் (411), புத்ராஜெயா (46), பெர்லிஸ் (9), லாபுவான் (7).

மேலும் இன்று, 29 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 13 பணியிடத் திரளைகள் ஆகும்.