17,236 புதிய நேர்வுகள், 212 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,236 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 212 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 10,961– ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 15,187 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 579 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (5,740), கோலாலம்பூர் (1,567), கெடா (1,328), சபா (1,247), ஜொகூர் (1,232), நெகிரி செம்பிலன் (1,215), பேராக் (935), கிளந்தான் (914), பினாங்கு (908), பகாங் (604), சரவாக் (589), திரெங்கானு (501), மலாக்கா (360), புத்ராஜெயா (66), பெர்லிஸ் (22), லாபுவான் (8).