23,564 புதிய நேர்வுகள், 233 மரணங்கள்

கடந்த 24 மணி நேரத்தில், 23,564 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். இது மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 1,513,024 ஆகக் கொண்டுவருகிறது.

மேலும், இன்று 233 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 13,713- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 23,564 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,062 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 518 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6,974), சபா (2,738), சரவாக் (2,548), கெடா (1,932), கோலாலம்பூர் (1,652), பினாங்கு (1,523), ஜொகூர் (1,323), கிளந்தான் (1,281), பேராக் (1,248), மலாக்கா (610), நெகிரி செம்பிலான் (608), திரெங்கானு (521), பகாங் (517), பெர்லிஸ் (64), புத்ராஜெயா (24), லாபுவான் (1).

மேலும் இன்று, 38 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 22 பணியிடத் திரளைகள் ஆகும்.