19,807 புதிய நேர்வுகள், 232 மரணங்கள்

சுகாதார அமைச்சு, இன்று மொத்தம் 19,807 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது, இது கடந்த ஐந்து நாட்களில், 20,000-க்கும் கீழே உள்ள முதல் பதிவாகும்.

ஜூலை 19-க்குப் பிறகு, கோலாலம்பூர் முதன்முறையாக 1,000-க்கும் குறைவான நேர்வுகளைப் பதிவு செய்தது.

இருப்பினும், கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே கவலைக்கிடமான போக்குகள் தொடர்கின்றன, சபா, கெடா, சரவாக், பினாங்கு, ஜொகூர் மற்றும் கிளந்தான் ஆகியவை புதிய தொற்றுநோய்களின் அடிப்படையில் கோலாலம்பூரை முந்தியுள்ளன.

புதிய தொற்றுநோய்களுக்குச் சிலாங்கூர் முக்கியப் பங்களிப்பாளராக தொடர்ந்து உள்ளது.

மேலும், இன்று 232 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 14,168-ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 18,200 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 496 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (5,379), சபா (2,638), கெடா (1,948), சரவாக் (1,772), பினாங்கு (1,501), ஜொகூர் (1,391), கிளந்தான் (1,196), கோலாலம்பூர் (999), பேராக் (703), பகாங் (598), மலாக்கா (558), திரெங்கானு (534), நெகிரி செம்பிலான் (508), பெர்லிஸ் (54), புத்ராஜெயா (24), லாபுவான் (4).