20,897 புதிய நேர்வுகள், 282 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,897 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 282 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 16,664– ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 18,465 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,005 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 464 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,371), சபா (2,594), சரவாக் (2,285), ஜொகூர் (2,159), கெடா (1,942), பினாங்கு (1,732), கிளந்தான் (1,479), பேராக் (1,204), கோலாலம்பூர் (1,003), பகாங் (798), திரெங்கானு (608), மலாக்கா (417), நெகிரி செம்பிலான் (215), பெர்லிஸ் (64), புத்ராஜெயா (25), லாபுவான் (1).

மேலும் இன்று, 22 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.