பயங்கரவாதப் பட்டியலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றும் வழக்கு –  மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி

இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் அடங்கியக் குழு தீர்ப்பு வழங்கியது.

மனுதாரர் வீ. பாலமுருகன் சார்பின் வழக்கறிஞர்களான அருள் மேத்யூசு, ஓமார் குட்டி, முகமது பர்அன், கலைநிலா, லிம் வெய் செய்ட் ஆகியோருடன் முன்னாள் சட்டத்துறை தலைவர் அம்பிகா அவர்களும் இக்குழுவுக்குத் தலைமையேற்று வாதாடினர்

இத்தடைச் சட்டம் வழக்குதாரர் உட்பட, பொது நலத்தையும் பொது மக்களையும் பாதிக்கிறது. தமிழர் இனத்தின் தார்மீக உணர்வைச் சிதைக்கிறது. உயிர்ப்பில்லாத, அதுவும் பல ஆண்டுக்குப் பின்னரான பொது அறிவிப்பு இல்லாத தடை நியாயமற்றது.

பட்டியலிட்ட அமல் முறை முறையற்றது என பலதரப்பட்ட தரவுகளுடன் பல மணி நேரக் கடுமையான, அழுத்தமான வாதங்களுக்கிடையே வழக்கு நடந்தேறியது

ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பையே மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியது வருத்தமளித்தாலும்; மேற்கண்ட நடவடிக்கையைத் தனது குழுவினர் மற்றும் வழக்கறிஞர் குழுவினர் ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பதாக வீ.பாலமுருகன் கூறினார்.

தொடர்ந்து, இவ்வழக்குக்குக் கடுமையாக உழைத்த வழக்கறிஞர்கள் குழுவுக்கும், நீதி வழங்கிய நீதிபதிகளுக்கும், தமக்கு எல்லா விதத்திலும் துணை நின்ற செயலகக் குழுவினருக்கும் நண்பர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கங்களுக்கும்  மற்றும் இவ்வழக்கை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்த தமிழ் நாளிதழ்கள் உட்பட அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக பாலமுருகன் வீராசாமி கூறினார்.