இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா

மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர இந்திய பிரதமர் மோடி வற்புறுத்தியதாக பெர்டினாண்டோ புகார் தெரிவித்தார்.

காற்றாலை மின்சார திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை மன்னார் காற்றலை மின்சார திட்டத்தை அதானியின் நிறுவனத்திற்கு வழங்க தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்துள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Malaimalar