7 தைவானிய அதிகாரிகள்மீது சீனா தடை

சீனா 7 தைவானிய அதிகாரிகள்மீது தடைகளை விதித்துள்ளது. அவர்கள் தைவானின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்கும் பிரிவினைவாதிகள் என்று சீனா கூறியிருக்கிறது.

தடை செய்யப்பட்ட அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தலைநிலச் சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுக்குச் செல்லமுடியாது.

தைவானைச் சுற்றி சீனா புதிய ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து தடைகள் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானுக்குச் செல்லத் திட்டமிடும் வேளையில் அந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றிருந்தார்.

 

 

 

-smc