ஆப்கானிஸ்தானில் கனத்த மழை, வெள்ளம் – 20 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாநிலமான லோகாரில் (Logar) பெய்த கனத்தமழையால் பெருகிய வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. லோகாரின் பல பகுதிகளை மழை பாதித்துள்ளது. அதில் 30க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக மாநிலத்தின் ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

பல கால்வாய்களும் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலமும்  வெள்ளத்தில் அழிந்தன.

அத்துடன் 2,000க்கும் மேற்பட்ட பண்ணை விலங்குகளும் வெள்ளத்தில் மாண்டன.

 

 

-smc