ரணில் அரசுக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்

ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் ரணில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றையதினம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இலங்கை ஜப்பான் ஒன்றியம் என்ற குழுவினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரணில் ஜப்பான் பயணம்

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினரின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் ஜப்பான் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ibc