சீனாவில் வசிக்கும் பிரான்ஸ் மக்களை பாதுகாக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை!

சீன அரசிடம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். சீனாவில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் தொடர்பாக கவனம் செலுத்தவும், அவர்களை பாதுகாக்கவும் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் தற்போது கட்டுக்கடங்காத கொரோனா தொற்று பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்படுகிறது.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவு கொரோனா தொற்று சீனாவில் பரவி வருவதை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

அதேவேளை, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி போன்ற பல்வேறு சர்வதேச நாடுகள் சீனாவில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ift