பிரான்ஸ் ஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழந்த மக்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மக்களில் பத்தில் ஏழு பேர் இதனை தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. 72% சதவீதமான மக்கள் மக்ரோனின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர். இவர்களில் 42 % சதவீதமானவர்கள் மிகவும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையின்மைக்கு ஓய்வூதிய சீர்திருத்தம் பிரதானமான காரணமாக அமைந்துள்ளது. ஜனாதிபதி மக்ரோன் கட்டாயப்படுத்தி ஜனநாயகம் இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட 1, 955 பேர் பங்கேற்றிருந்தனர்.

 

 

-if