பிரான்ஸில் தடையை மீறி நினைவுப் பேரணி, 2000 பேர் பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகரில் தடையை மீறி காவல்துறையின் வன்முறைக்கு எதிராகச் சுமார் 2,000 பேர் நினைவுப் பேரணி நடத்தியுள்ளனர்.

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அண்மையில் பதின்ம வயது இளையர் காவல்துறையால் கொல்லப்பட்டார்.

சென்ற வாரம் பிரான்ஸின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னர் இப்போது மக்கள்  காவல்துறை வன்முறை எதிர்ப்பு நினைவுப் பேரணியை நடத்துகின்றனர்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கறுப்பின பிரெஞ்சு ஆடவர் அடாமா டிராவ்ரெ உயிரிழந்தார்.

தற்போது அவருடைய குடும்பத்தினர் சட்டவிரோத நினைவுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பொது அமைதிக்குப் பாதிப்பு நேரும் சாத்தியம் அதிகம் என்பதால் பேரணியை அனுமதிக்கமுடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

 

-sm