சாத்தியமான வாய்ப்பில் வரிச்சுமை குறைக்கப்படும்

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தற்போதைய வரிச்சுமையை விரைவில் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பில் நிதியமைச்சில் இன்று (ஜூலை 13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சியம்பலாபிட்டிய, நாட்டின் வரி செலுத்துவோர் மீது புதிய சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை என விளக்கமளித்தார்.

“அவர்களுடன் கலந்துரையாடி, நமக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே இந்தச் சுமையைக் குறைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

இலங்கை தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பேசிய இராஜாங்க அமைச்சர், 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 38.1% வளர்ச்சி காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

வரி வருவாய் 44.9%, வருமான வரி 53.6%, சரக்கு மற்றும் சேவை வரி 65.6%, வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரி 12.2% குறைந்துள்ளது. இது சுங்கத் துறையின் தவறால் அல்ல, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர பல பொருட்களின் இறக்குமதியை நிறுத்த வேண்டியிருந்தது” என்று மேலும் விளக்கிய அவர், ஒட்டுமொத்த செலவுகள் 47.8% அதிகரித்துள்ளது, முக்கியமாக நலத்திட்டங்கள் மற்றும் மானியம் தற்போது நடைமுறையில் உள்ளது.

 

 

-ad