தாய்லந்தில் போதைமருந்து கலந்த தேநீரைக் குடித்த சுற்றுப்பயணி மரணம்

தாய்லந்தின் பட்டாயா நகரில் உள்ள கஞ்சா உணவகத்தில் கஞ்சா கலந்த தேநீரை அருந்திய சுற்றுப்பயணி மாண்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.

ஹமாட் அல்பிலாய்ஹெர் எனும் அந்த சுற்றுப்பயணி, மூச்சுவிட முடியாமல் உணவகத்தில் மயங்கி விழுந்தார். மீட்பு அதிகாரிகளும் பட்டாயா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் கடைக்கு விரைந்து சென்று அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பிறகு அவர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

ஹமாட் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரியவில்லை என்று The Nation Thailand தெரிவித்தது.

அவர் எப்போதும் உணவகத்துக்கு வந்து கஞ்சா கலந்த தேநீரையும் தண்ணீரையும் கேட்பார் என்று உணவக ஊழியர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். அவர் அங்குக் கஞ்சாவைப் புகைத்ததில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

 

-sm