காஸாவின் ராஃபா எல்லையைத் திறந்துவிட எகிப்திய அதிபர் ஒப்புதல்

எகிப்திய அதிபர் அப்தல் பட்டாஹ் அல்-சிசி காஸாவின் ராஃபா எல்லைப் பகுதியைத் திறந்துவிட ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சுமார் 20 கனரக வாகனங்களில் காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல அது வழிவிடும்.

இஸ்ரேலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எகிப்திய அதிபரிடம் தொலைபேசியில் உரையாடியதை அடுத்து ராஃபா எல்லை திறக்கப்படவிருக்கிறது.

எகிப்து வழியாக காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப்போவதில்லை என்று இஸ்ரேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குண்டும் குழியுமாக உள்ள ராஃபா எல்லைப் பகுதியைச் சரிசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.