காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் இனி இஸ்ரேலில் பணியாற்ற முடியாது

காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் யாரும் இனி இஸ்ரேலில் வேலை பார்க்க மாட்டார்கள் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதற்குமுன், காஸா நகரை முழுமையாகச் சுற்றி வளைத்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேலியப் படையினர் கடந்த சில நாள்களாகக் காஸாவில்  தரைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். முக்கியச் சாலையைப் பயன்படுத்தி இஸ்ரேலியப் படை காஸாவின் நகர்ப்பகுதியை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் நாட்டில் வேலை செய்யும் பாலஸ்தீனர்கள் அனைவரும் காஸா வட்டாரத்துக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று இஸ்ரேல் கூறியது.

காஸா வட்டாரத்துடன் அனைத்துத் தொடர்புகளையும் முற்றாகத் துண்டிப்பதாகவும் அது சொன்னது. இஸ்ரேலில் இனிமேல் காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையே காஸாவுக்குள் வரும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அனைவரும் சடலங்களாக நாடு திரும்புவர் என்று ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

-sm