ஜனநாயகச் சீரமைப்பிற்கு அயராது செயலாற்றிய பெர்சே முன்னாள் துணைத் தலைவரும் இக்ராம் மலேசியா இயக்கத்த்தின் தலைமைச் செயலாளருமான ஷாருல் அமான், தேசியப் புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று முந்தினம் அதிகாலை காலமானார். தம்முடைய வாழ்நாளை நாட்டிற்காக அர்ப்பணித்த இவரின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.
மலேசியாவின் ஜனநாயகச் சீரமைப்பிற்கு ஷாருல் அமானின் அர்ப்பணிப்புகளை மேற்கோள்க்காட்டிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்தத் துயர நேரத்தில் அவரின் குடும்பத்தார் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று தம்முடைய சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஷாருல் அமான் சிவில் உரிமைகள் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். பெர்சே வழி தேர்தல் சீரமைப்புக்கும் மிகக்கடுமையாகப் போராடியவர். அவரின் பணிகள் மலேசிய அரசியல் களத்தில் நிலைத்திருக்கும் தாக்கம் நீடித்து நிலைபெற்றிருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும் என்று அவர் போராடினார். தேசியப் புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரோடு இருந்த கடைசி தருணங்களை பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்மாலிஃப் அப்துல் அடாம் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார்.
ஷாகுல் அமான் ஓய்வு ஒளிச்சலின்றி சமூக நீதிக்காகப் போராடியவர். எதிர்காலச் சந்ததியினருக்கு மலேசியா ஒரு சிறந்த இடமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் அர்ப்பணிப்புமிக்க நிலைத்திருக்கும் என்று அவர் சொன்னர்.
நாட்டின் 14 4ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அப்போதைய பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அப்பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ஷாகுல் அதன் இடைக்காலத் தலைவராக 2018 மார்ச் முதல் 2018 அக்டோபர் வரை சேவையாற்றினார். இவர் முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக்கின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஷாருல் அமைதியான ஒரு சமூகப் போராளி என்று பெர்சே முன்னாள் தலைவர் மண்டிப் சிங் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். 2016ஆம் ஆண்டு பெர்சே வழிகாட்டுதல் குழுவில் சேர்ந்தபோது ஷாருலை முதன் முதலாக சந்தித்த்தாக அவர் சொன்னார். மென்மையாக பேசினாலும் உறுதியானவராக இருந்தார்.
அவரின் அமைதி வலிமைமிக்கது. இந்தப் பண்பு அவரைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெர்சேயில் தீவிரமாக ஈடுபட்டதற்காக அவர் கொடுத்த விலை பெரும் சம்பளம் வாங்கும் வேலையில் இருந்து முன்னெச்சரிக்கை எதுமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டு சில மணி நேரங்களுக்குள் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் சோர்ந்து விடவில்லை. தனக்கு நிகழ்ந்தது குறித்து புகாரும் செய்ததில்லை. தொடர்ந்து மக்களுக்கும் இயக்கத்திற்கும் போராடுவதற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று மண்டிப் சிங் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு பெர்சே 5.0 பேரணிக்கு முன்னதாக தானும் மரியாவும் கைது செய்யப்பட்டபோது ஷாருல் சற்றும் தயங்காமல் முன்வந்து பல்லாயிரக்கணக்கான மலேசியர்களை வழி நடத்தியதை மண்டிப் நினைவுகூர்ந்தார். மரியா 11 நாட்கள் காவலில் வைக்கப்பட்டபோது மீண்டும் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பியது ஷாருல்தான். அந்த இருண்ட, நிச்சயமற்ற நாட்களில் பெச்சே என்ற பேரியக்கம் சீர்குலைந்து விடாமல் கட்டிக் காத்ததும் அவர்தான்.
ஷாருல், மலேசியாவை சிறந்த இடமாக மாற்றுவதற்கு நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி. உங்கள் தைரியம், கருணை, உங்கள் அசைக்க முடியாத மனப்பான்மை எப்போதும் எங்களை வழிநடத்தும் என்று மண்டிப் கூறினார்.
இதற்கிடையே ஷாருல் ஓர் உற்சாகமான போராளி, அவர் தனது போராட்டத்தின் அடையாளத்தை தீர்த்துப்போகச் செய்யாமல் மாறுபட்ட, உலகளாவிய கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் என்று முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் தெரிவித்தார்.
நான் கல்வி அமைச்சராக இருந்தபோது எனது பத்திரிகைச் செயலாளராக அவர் ஆற்றிய அயராத உழைப்புக்கு நான் அவருக்கு நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.