இன்று , மலேசியாவில் 14 பகுதிகள், சபாவில் இரண்டு மற்றும் சரவாக்கில் ஒரு பகுதி என மொத்தம் 17 இடங்களில் முதலாம் நிலை (Level 1) வெப்பமான வானிலை பதிவாகியுள்ளது. இது ‘எச்சரிக்கை’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: பெர்லிஸ்; கெடாவில் குபாங் பாசு, பெண்டாங், கோத்தா செத்தார் மற்றும் பாடாங் தெராப்; பேராக்கில் கோலாகங்சார் மற்றும் உலு பேராக்; கிளாந்தானில் ஜேலி, பாசிர் மாஸ், தானா மேரா மற்றும் மாச்சாங்; கோலாலம்பூர்; மற்றும் சிலாங்கூரில் கோம்பாக் மற்றும் சிப்பாங்.
மேலும், சபாவில் பியூஃபோர்ட் மற்றும் தெலுபிட் ஆகிய இடங்களும், சரவாக்கில் லிம்பாங் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் போது, அங்கு ‘முதலாம் நிலை’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
-fmt























