அமெரிக்க டிரோன் ரகசியம் கண்டுபிடித்து விட்டோம் என்கிறது ஈரான்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோன் போலவே ஈரானும் தயாரித்துள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான், ஈரானில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதை தடுக்க, ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதலை அதிகரித்துள்ளது.

ஈரானில் டிரோன் மூலம் தாக்குதல் நடந்த போது விபத்தில் சில டிரோன்கள் நொறுங்கி உள்ளன. அவற்றை ஈரான் ராணுவம் சேகரித்து ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில் ராணுவ கமாண்டர் அமீர் அலி ஹஜிஜடே நேற்று கூறியதாவது: அமெரிக்க டிரோன்களின் தொழில்நுட்ப ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் நாங்கள் கைப்பற்றிய அமெரிக்க டிரோனை ஆராய்ந்து பல ரகசியங்களை அறிந்து கொண்டோம். அதன்பின், டிரோன் போலவே நாங்களும் ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளோம்.

டிரோனில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ள தொழில்நுட்ப இரகசியத்தில் 4 முக்கிய விஷயங்களை பகிரங்கமாக வெளியிடுகிறோம். அப்பொழுதாவது ஈரான் ராணுவத்தின் பலத்தை அமெரிக்கா புரிந்து கொள்ளட்டும். அமெரிக்காவின் ஆர்கியூ170 டிரோன் போலவே ஈரானும் தயாரிக்க தொடங்கி உள்ளது. இந்த டிரோன் ஈரானின் தேசிய சொத்து. எனவே, இதுகுறித்து விரிவாக சொல்ல முடியாது. இவ்வாறு அமீர் அலி கூறினார்.