ரஷ்யாவில் இரட்டை குண்டுவெடிப்பு:15 பேர் பலி

ரஷ்யாவில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 15 பலியானார்கள். ரஷ்யாவின் காகசஸ் மாகாணத்தில் நடந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள்.

மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது. ரஷ்யாவின் முக்கிய பகுதியான காகசஸ் மாகாணப்பகுதியில் தான் உள்துறை அமைச்சகம் உள்ளது. இங்கு தான் குண்டு வெடிப்பு சம்பவம் அ‌ரங்கேறியுள்ளது. பலியான 13 பேரில் 12 பேர் போலீசார் ஆவர்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியதாவது: முதல் குண்டு வெடிப்பு ‌தகஸ்தானில் உள்ள மகசக்கலாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இது ‌‌போலீஸ் சோதனை சாவடி அருகே நடந்தது. இதன் பின்னர் அதன் தாக்கமாக இரண்டாவது வெடிகுண்டு வெடித்தது என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ‌இந்நிலையில் அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.