உதயகுமார் 13 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்

எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் அதன் நடப்புத் தலைவர் பி. உதயகுமாரை களம் இறக்குவதாக இன்று அறிவித்தது.

தாம் இரு தொகுதிகளில், கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற ஸ்ரீ அண்டலாஸ் தொகுதி, போட்டியிடப் போவதாக உதயகுமார் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தற்போது அவ்விரு தொகுதிகளும் பக்கத்தான் ரக்யாடின் தொகுதிகளாகும்.

“நான் வென்றால், நான்தான் நாடாளுமன்றம் மற்றும் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கும் செல்லும் முதல் ஹிண்டார்ப் வேட்பாளாராக இருப்பேன். சமவாய்ப்பு, உயர்நிலைக்கான நகர்வு மற்றும் இனவாதம் ஒழிப்பு ஆகியவை எங்களின் கொள்கையாக இருக்கும்”, என்றாரவர்.

தற்போது கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பாஸ் கட்சியின் டாக்டர் சித்தி மாரியா மாமுட், டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஸ்ரீ அண்டலாசின் சட்டமன்ற உறுப்பினராவார்.