இளம் பெண்களுடனான கேளிக்கைக்கு பல கோடியை செலவிட்ட மாஜி பிரதமர்

இளம் பெண்களுடனான கேளிக்கை விருந்துக்கு இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, 7 கோடி வெள்ளிக்கு மேல் செலவிட்டுள்ளார்.

இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர். அவர், செக்ஸ் தொழிலாளர்கள் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காகப் பல கோடி வெள்ளி செலவிட்டதாகப் புகார் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது, 17 வயது பெண்களுடனும் இவர் உறவு கொண்டதாகப் புகார் உள்ளது. இதை அவர் மறுத்தாலும் சம்பந்தப்பட்ட பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த, 2009 மற்றும் 2010ம் ஆண்டு இவரிடம் கணக்காளராக இருந்த குய்செப் ஸ்பினெலி குறிப்பிடுகையில், “மிலன் நகரில் உள்ள பங்களாவின் கீழ்த்தளத்தில் தான் இளம் பெண்களுடனான கேளிக்கை விருந்து நடக்கும். சில பெண்கள் நர்ஸ் போலவும் சிலர் போலீஸ் போலவும் உடை அணிந்து வந்து, இந்த விருந்தில் ஆபாச நடனமாடுவார்கள். இவர்களுக்கெல்லாம் உறையில் பணத்தை வைத்து அளிக்கும் படி பிரதமராக இருந்த பெர்லுஸ்கோனி கூறுவார். இதற்காக, 7 கோடி வெள்ளிக்கு மேல் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.