40 ஆண்டுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும் பறக்கின்றன

லண்டன்: கடந்த 40 வருடங்களுக்கு முன், அதாவது 1969-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் 6 விண்வெளி வீரர்களுடன் அப்போல்லோ-11 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது.

நிலவிற்கு வெற்றிகரமாக சென்று இறங்கிய விண்வெளி வீரர்கள், தங்கள் நாட்டின் அறிவியல் மற்றும் பொறியியல் திறமையை பறைசாற்றும் விதத்தில் அங்கு அமெரிக்காவின் கொடியினை நட்டு வைத்தனர்.

யாரும் சென்றடையாத நிலவில் அங்கு கடுமையான காலநிலை நிலவியும்கூட அப்போது அங்கு அவர்களால் நடப்பட்ட கொடிகளில், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நட்ட கொடியினைத் தவிர, மற்ற ஆறு கொடிகள் இன்னும் நின்று அசைந்துகொண்டிருப்பதாக லண்டனை சேர்ந்த டெய்லி மெயில் கூறுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் பயன்படுத்தப்படும் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் நிறுவப்பட்டுள்ள ஆர்பிட்டர் கேமரா மூலம்,  நிலவு அதன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும்போது அந்த கொடியின் நிழல் தெரிவதாக, தெளிவான புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக அது கூறியுள்ளது.

அமெரிக்காவின் அப்போல்லோ-11 என்ற விண்கலம் 1969-ஆம் ஆண்டு நிலவில் இறங்கியவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங், தொலைகாட்சிக்கு நேரடி பேட்டி அளித்தபோது, இந்த வெற்றியானது ‘மனிதனுக்காக ஒரு அடி எடுத்துவைத்தால், அது மனிதகுலத்திற்கு ஒரு மிகப்பெரிய தாண்டல்’ என்றார்.

அதனை தொடந்து அடுத்த குழுவின் இறுதி நிலவுப்பயணம் 1972-ல் இருந்தது குறிப்பிடத்தக்கது.