பிகேஆர் ரபீஸ்சி பாபியா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்

பிகேஆரின் வியூக இயக்குனர் ரபீஸ்சி ரமலி தேசிய தீவன கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரத்தில் வங்கிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிடப்பட்டத்தில் உட்பட்டிருந்ததற்காக இன்று காலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

“நான் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் (பாபியா) கைது செய்யப்பட்டுள்ளேன். இப்போது நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவேன்”, என்று அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள் மோபைல் செய்தியில் தெரிவித்தார்.

இன்று காலை மணி 7.00 க்கு போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர் அவர் தெரிவித்தார்.

“என்னை ஷா அலாம் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்கின்றனர் என நான் கருதுகிறேன்”, என்றாரவர்.

என்எப்சி ஊழல் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் மற்றும் அதன் இயக்குனர்களின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிட்டார் என்று ரபீஸ்சி பாபியா சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டார்.

 

 

 

 

TAGS: