“அம்னோ-இசி தொடர்பு”: பிகேஆர் சைபுடின் விசாரிக்கப்படுகிறார்

தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமார் ஓர் அம்னோ உறுப்பினர் என்று குற்றம் சுமத்தியத்தியதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் போலீசாரால் விசாரிக்கப்படுகிறார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 500 இன் கீழ் சைபுடின் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக சைபுடின் விசாரிக்கப்படுகிறார் என்று பிகேஆர் சட்டப் பிரிவு தலைவர் லத்தீபா கோயா கூறினார்.

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் கூடினபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சைபுடின் எதிர்கொள்ள வேண்டும்.

இன்று புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு தமது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக சென்றிருந்தபோது சைபுடினிடம் இக்குற்றச்சாட்டு பற்றி தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

TAGS: