எலிசபத் ராணியின் கணவர் பிலிப் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்

எலிசபத் மகாராணியின் கணவரான, இளவரசர் பிலிப்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்று வர்ணிக்கப்படுகிறது.

91 வயதாகும் இளவரசர் பிலிப் ஸ்காட்லாந்து சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலகட்டத்தில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அவர் இப்போது அனுமதிக்கப்படுகிறார்.