பிலிப்பைன்சில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 ரிக்டர் அளவுக்கு நேற்று நிலநடுக்கம் காணப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சமார் தீவுக்கருகே, 7.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தோ னேசியா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் அதிர்ந்தன, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்த கடும் நிலநடுக்கத்தால், பிலிப்பைன்ஸ் நாட்டின் சில பகுதிகளில் சாலைகளும், பாலங்களும் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.