லண்டனில் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் படுகொலை

லண்டன்: லண்டனில் கொலை குறித்து விசாரிக்க சென்ற ‌‌இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு பெண் ‌காவல்துறை அதிகாரிகள் தற்காப்புக்கு துப்பாக்கி கொண்ட செல்லவில்லை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றும், அதுவே கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது என்றும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கான விசாரணையை துவக்கியுள்ளது லண்டன் காவல்துறை.