சாண்டி புயலை வைத்து சர்ச்சைப் புயலைக் கிளப்பிய கவர்ச்சி மாடல்

நியூயார்க்: பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகி நானா கோவியா, சாண்டி புயலால் சீரழிந்து போன நியூயார்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரது பேஸ்புக்கில் வந்து திட்டிவிட்டு செல்கின்றனராம்.

விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் நிறையப் பேர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம்.

30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர். சாண்டி புயலால் சேதமடைந்து போயுள்ள நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்த அவர் அங்கு காணப்பட்ட சேதங்களுக்கு மத்தியில் விதம் விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை தனது பேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளார்.

சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், இழிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர்.