குப்பைத் தொட்டிக்குள் மாண்ட ஐந்து ஏழைச் சிறார்கள்; சீனாவில் மனதை உருக்கும் சம்பம்

சீனாவின் தென்மேற்கே வீடின்றி வீதியில் வாழ்ந்து வந்த சிறார் ஐந்து பேர் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றுக்குள்ளிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

குளிர் தாங்கமுடியாமல் கதகதப்புக்காக குப்பைத் தொட்டிக்குள் இறங்கிய இந்தச் சிறார் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.

சுமார் பத்து வயதுடைய இந்த ஐந்து சிறாருக்கு நேர்ந்த பரிதாபம் சீனாவில் மக்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. சீன சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமாக பல இலட்சம் பேர் கோபாவேசமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குவீஸூ மாகாணத்தில் பீஜீ என்ற ஊரில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றில் இந்த சிறாரின் சடலங்களை வெள்ளியன்று காண நேர்ந்ததாக பெய்ஜிங் நியூஸ் செய்தி செய்தி நிறுவனம் கூறுகிறது.

இச்சிறாரின் குடும்பத்தினரை கண்டறிய காவல்துறையினர் முயன்றுவருகின்றனர்.

-BBC