ஜனவரி 12 பேரணி மிகவும் அமைதியாக இருக்கும் என பக்காத்தான் வாக்குறுதி

sabuஎதிர்வரும் மக்கள் எழுச்சிப் பேரணி ( Himpunan Kebangkitan Rakyat ) இது வரை நடந்திராத அளவுக்கு மிகவும் அமைதியான பேரணியாக இருக்கும் என பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ளது.

“நாங்கள் அதனை மிகவும் அமைதியான பேரணியாக திகழச் செய்வோம். அது மிகவும் அமைதியாக நிகழும்  போது கோலாலம்பூரில் உள்ள வர்த்தகர்கள் தங்கள் விற்பனை சாதனை அளவுக்கு உயருவதைக் காண்பார்கள்.”

ஹோட்டல்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். உணவு விடுதிகளில் எல்லா உணவும் தீர்ந்து விடும்,” என அந்தப் பேரணி ஏற்பாட்டுச் செயலகத்துக்கு தலைமை ஏற்றுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு இன்று நிருபர்களிடம் கூறினார்.

எனவே ஜனவரி 12ம் தேதி மெர்தேக்கா அரங்கத்தில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அந்தப் பேரணியில் கலந்து கொள்ள தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வருமாறு மாட் சாபு என்றும் அறியப்படும் முகமட் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.