மாலி சண்டையில் 10 பிரான்ஸ் வீரர்கள் பலி

mali france armyபாரீஸ்: மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலி இராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி இராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல் பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே கோவா நகரில் , கிளர்ச்சியாளர்களுக்கும், பிரான்ஸ், மாலி இராணுவ கூட்டுப் படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பிரான்ஸ் வீரர்கள் உள்பட 10 பேர் பலியானதாக பிரான்ஸ் இராணு செய்தி தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்ட நடந்து வருகிறது.