சிலி நாட்டில் இலவசக் கல்வி கோரி போராட்டம்

chile_students_protestஇலவசக் கல்வி கோரி சிலி நாட்டின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் முக்கிய நகரங்களில் தெருக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலையை மூடி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரமடக்கும் பொலிஸாருடன் மோதி, வீதிப்போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அடித்து நொருக்கியதால், தலைநகர் சந்தியாகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்துள்ளது.

இலவசமான உயர்தரத்திலான கல்வி கோரி சிலி நாட்டின் மாணவர்கள் கடந்த 2 வருடமாகப் போராடி வருகிறார்கள். ஆனால், 2013 இல் நடக்கும் தேசிய மட்டத்திலான மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

TAGS: