தியன், தாம்ரின், ஹேரிஸ் மீண்டும் கைது

TTHபிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காஃபார் மற்று எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தாம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய தாம்ரின், போலீசார் தமது வீட்டிலிருப்பதாகவும், அவர்கள் இரவு மணி 7.5 க்கு தமது வீட்டிற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

ஹேரிஸ் இப்ராகிம் இரவு மணி 7.00 க்கு கைது செய்யப்பட்டதை பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ உறுதிப்படுத்தினார்.

இம்மூவரும் தேசநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் நான்கு நாள்களுக்கு முன்பு மே 23 இல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் ரிமாண்ட் மனுவை மஜிஸ்திரேட் நிராகரித்ததால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.