சுப்ரா: தேச நிந்தனை சட்டத்தை நீக்க முன்மொழிந்தவர் பிரதமர்

1 dr subraஅரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை நீக்க வேண்டும் என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “முன்வைத்த” ஒரு யோசனையாகும் என்று சுகாதார அமைச்சர்  எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அதை அமைச்சரவை “ஆராய்ந்து நல்ல முடிவெடுக்கும்” என்றாரவர்.

“பிரதமர் நாட்டின் தலைவர் என்பதால் எந்தவொரு யோசனையையும் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு”, என்றவர் சொன்னார். சுப்ரமணியம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.