மாற்றரசுக் கட்சியினர் ‘மலம் கிண்டுபவர்கள்’: அமைச்சர் சாடல்

adnanமாற்றரசுக் கட்சியினரை “மலத்தைக் கிண்டிக் கிளறுபவர்கள்” என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் காட்டமாகக் கூறினார்.

“ஒரு விவகாரத்தைக் கிண்டிக் கிளறி குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவர்களின் வேலை”. இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் தேச நிந்தனை சட்டம் குறித்து அவரின் கருத்தைக் கேட்டபோது தெங்கு அட்னான் இவ்வாறு பொறிந்து தள்ளினார்.

ஆனால், தேச நிந்தனை சட்டத்தை அகற்றுவதன் தொடர்பில் அவரின் நிலைபாடு என்னவென்பதை அவர் தெரிவிக்கவில்லை