இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார்!

navaneethmpilaiஇலங்கைக்கான பயனத்தின் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அது தொடர்பில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வு செப்டம்பர் 9 முதல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதியன்று இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை ஆகஸ்ட் 31ம் திகதியன்று கொழும்பில் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்புடன் தமது விஜயத்தை முடித்துக்கொள்வார்.

இதன்போது அவர் போருக்கு பின் இலங்கையில் இடம்பெற்று வரும் முன்னேற்றங்களை கண்கானிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: