பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி

Bomb blast in Peshawar killed at least 10 peopleபாகிஸ்தானின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 28பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பலோச்சிஸ்தான் பகுதியில் பொலிஸ் அதிகாரியொருவரின் மரண சடங்கிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 50ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்கு இதுவரையில் இந்த ஒரு அமைப்பும் உரிமை கோராத போதிலும், பலோச்சிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் தலிபான் அமைப்பினரே இந்த தாக்குதலையும் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.