பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான 100 டன் மூலப்பொருட்கள் மீட்பு!

pakistan terrorவெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான சுமார் 100 டன் மூலப்பொருட்கள் பாகிஸ்தான் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தொழிற்சாலையொன்றில் குண்டுகள் தயாரிப்பதற்கான இரசாயன பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அந்நாட்டு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த பகுதியில் இந்த வருட முற்பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.