‘மாணவர்களை விசாரிக்கவில்லை எனப் போலீஸ் கூறுவது பொய்’

schoolசுங்கை பூலோ ஓசிபிடி ஜுனாய்டி பூஜாங், போலீசார் பள்ளிக் குளியல் அறை சிற்றுண்டி அருந்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது பற்றி மாணவர்களிடம் விசாரிக்கவில்லை என்று மறுப்பதைப் பொய் என்கிறார் எஸ்கே பள்ளி மாணவர் ஒருவரின் தந்தை.

தம்மை ராஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தம் ஒன்பது வயது மகளை ஜூலைக்கும் ஆகஸ்டுக்குமிடையில் போலீசார் இரண்டு தடவை விசாரித்துள்ளனர் என்றார்.

“போலீசாரின் விசாரணையால் மிரண்டு போன என் மகளுக்கு இப்போது பள்ளி செல்லும் விருப்பமே இல்லாமல் போய்விட்டது.

“ஓசிபிடி சொல்வது வடிகட்டிய பொய்”, என்றாரவர்.