செயல்திட்டத்தைத் தாமதப்படுத்துவது ஏன்? பிரதமருக்கு பினாங்கு இண்ட்ராப் கேள்வி

1 hindrafபினாங்கு  இண்ட்ராப் தலைவர் கே.கலைச்செல்வம்,  இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிஎன் ஏமாற்றிவிட்டதா?” என்று பலரும் இண்டாராபைக் கேட்கிறார்கள் என்றாரவர்.

“செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன இடர்பாடு? பிஎன் அல்லது நஜிப் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமலிருப்பது ஏன்?  பிஎன் தேர்தலில் வெற்றிபெற நாங்கள் கடுமையாக பாடுபட்டோம்.

“அவர்கள் ஆட்சிக்கு வந்து 100 நாள்களுக்குமேல் ஆகியும் எங்கள் செயல்திட்டம் செயல்படுத்தப்படவில்லை; எங்கள் சமூகத்தின் வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமுமில்லை”, என்றாரவர்.