‘ஓடி ஒளியவில்லை, வீட்டில்தான் இருந்தேன்’: பாக் சமட்

samad 1தேசிய இலக்கியவாதி சமட் சைட் போலீசுகுப் பயந்து  ஓடி ஒளிந்துகொண்டார்  என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறி இருந்தார்.  ஆனால், பாக் சமட் அதை மறுக்கிறார்.

போலீஸ்  வீட்டுக்கு வரவில்லை  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார் . போலீஸ் தலைவர்  “பொய்யான செய்திகளைப் பரப்பி தம் பெயரைக் கெடுப்பதாக” அவர் சாடினார்.

“ நாள் முழுக்க வீட்டில்தான் இருந்தேன், யாரும் வரவில்லை”, என்றாரவர்.

“சாங் சாகா மலாயா” கொடி பறக்கவிடப்பட்டது தொடர்பில் போலீஸ், சமட்டைத் தேடி அவருக்கு வீட்டுக்குச் சென்றதாகதாக காலிட் கூறி இருந்தார்.