தெற்கு சூடான் மக்களை கைவிட்டு விடப்போவதில்லை என அங்குள்ள ஐநா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக நடந்துவரும் இன வன்முறைகளின் தொடர்ச்சியாக, அங்கு சிவில் யுத்தமொன்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
ஐநா வளாகத்துக்குள் தஞ்சமடைந்துள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஜூபா நகரில் உள்ள ஐநா பேச்சாளர் ஜோசப் கோண்டராஸ் கூறுகிறார்.
ஜூபாவை அண்டியுள்ள பல பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர்.
மக்கள் உகாண்டாவின் எல்லையை நோக்கி இடம்பெயர்ந்துவருகின்றனர்.
அதிபர் சல்வா கீயரின் படையினருக்கும் அவரது எதிர்ப்பாளர் ரீக் மஷாருக்கு விசுவாசமான படையினரும் மோதி வருகின்றனர்.
தெற்கு சூடானின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்த மோதல் பரவியுள்ளமை குறிப்பிட்டதக்கது. -BBC

























ஐநா சொல்வது உண்மை! கை விடாது! ஏன்னென்றால் அங்கு எண்ணை உள்ளது! பண் கிம் மோன் மற்றும் எனைய உலக கொள்ளையர்கள் அங்கும் திருட ஆரம்பித்துவிட்டனர்.
தெற்கு சூடான் மக்களை கைவிடாது ஜ,நா ஈழமக்களை கைவிடும் ஜ நா!
ஆமாடா ,ஈழ தமிழர்களை மட்டும் கைவிடுங்கள் .q
அட அயோக்கிய புடிங்கிகளா எந்த ம… குடா சூடானை இரண்டாக பிரிதிங்கே?