RSF தரவு பல்வேறு குறியீடுகளில், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மதிப்பெண்கள் உயர்ந்துள்ளன, ஆனால் பல மற்ற பகுதிகளில் குறைவான மதிப்பீடுகள் பதிவாகியுள்ளன.
“இந்த ஆண்டிற்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், மலேசியா 52.73 புள்ளிகளுடன் 95-வது இடத்தைப் பிடித்துள்ளது.”
அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பு Reporters Without Borders) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், கடந்த ஆண்டு 88-வது இடத்தில் இருந்த மலேசியா தற்போது 95-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த அந்த நாடு, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மலேசியா 2024-இல் 107-வது இடத்திலும், 2023-இல் 73-வது இடத்திலும் இருந்தது.
ஆசியான் (ASEAN) பிராந்தியத்தில், மலேசியா தனது அண்டை நாடான தாய்லாந்து (92வது இடம்)க்கு பின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக புருனை (96), பிலிப்பைன்ஸ் (114), சிங்கப்பூர் (123), இந்தோனேசியா (129), கம்போடியா (151), லாவோஸ் (154), மியான்மார் (166) மற்றும் வியட்நாம் (174) ஆகியவை உள்ளன..
அரசியல் அழுத்தங்களிலிருந்து ஊடகங்களின் சுதந்திரத்தை அளவிடும் மலேசியாவின் அரசியல் குறியீடு 44.66-லிருந்து 43.00-ஆக குறைந்துள்ளதாக RSF தெரிவித்துள்ளது.
ஊடகங்களின் நிதிச் சுதந்திரத்தை மதிப்பிடும் பொருளாதாரக் குறியீடு 48.67-லிருந்து 40.28-ஆக குறைந்துள்ளது.
செய்தியாளர்களைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டக் குறியீடு, முன்பு 46.26-ஆக இருந்த நிலையில் தற்போது 43.71-ஆக உள்ளது.
சமூக அழுத்தங்கள் மற்றும் சுய-தணிக்கை (self-censorship) ஆகியவற்றை ஆய்வு செய்யும் சமூக-கலாச்சாரக் குறியீடு (sociocultural indicator), 62.72-லிருந்து 51.25-ஆகக் குறைந்து பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு குறியீட்டில் முன்னேற்றம் காணப்பட்டது, அது 78.16-லிருந்து 85.42-ஆக உயர்ந்துள்ளது. இது பத்திரிகையாளர்களின் உடல் ரீதியான, மன ரீதியான மற்றும் தொழில்முறை அபாயங்களிலிருந்து அவர்களுக்கான பாதுகாப்பு குறித்த வலுவான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கிறது.
























