மலாக்காவில் உள்ள 21 இடங்களையும் பாரிசான் நேசனல் தக்கவைத்துக் கொள்ளும்

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் தற்போது கைவசம் வைத்துள்ள அனைத்து 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது என்று அதன் தலைவர் அகமது ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நெகிரி செம்பிலான் தேர்தலின் போது செய்யப்பட்ட ஏற்பாட்டைப் போல, பெரிகாத்தான் நேஷனல் உட்பட எந்தவொரு கட்சியுடனும் உடன்பாடு காண்பதற்கு கூட்டணி தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

மலாக்காவில் உள்ள 28 மாநிலத் தொகுதிகளில், மலாக்கா பாரிசான் தலைவராகவும் இருக்கும் முதலமைச்சர் அப் ரவூப் யூசோ, அனைத்து 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்வதில் உறுதியாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினருடனும் பெரிகாத்தான் நேசனல் உட்பட நிச்சயமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தம் அல்லது உடன்பாடு குறித்தும் பாரிசான் நேஷனல் மத்திய தலைமைத்துவத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும், என்று கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலிலும் பாரிசான் – பெரிகாத்தான் தேர்தல் உடன்பாடு நீட்டிக்கப்படும் என்று ஜாஹித் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

நெகிரி செம்பிலான் தேர்தலில் இரு கூட்டணிகளும் இணைந்து மொத்தம் 25 இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மலாக்கா மாநில சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் முன்கூட்டியே கலைக்கப்படாவிட்டால் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் அல்லது தாமதமாக பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

 

 

-fmt