நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பு: ஒற்றுமை அரசாங்கத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ஜாஹித்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடனான மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், ஒற்றுமை அரசாங்கத்தின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான உறவு சுமுகமாகவே நீடிக்கிறது என்று துணைப் பிரதமர் அகமது ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுவதன் மூலம், புத்ராஜெயாவில் உள்ள கட்சிகள் அரசாங்க விவகாரங்களைக் கையாள்வதில் தொழில்முறைத் தன்மையுடன் (professional) செயல்பட்டு வருவதாக அம்னோ தலைவர் கூறினார்.

எங்களுக்கு இடையிலான உறவு நன்றாக உள்ளது. நாம் அரசியல்வாதிகளாக இருந்தாலும், அரசாங்க விஷயங்களை நிர்வகிப்பதில் தொழில்முறையாகவே செயல்படுகிறோம், என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடனான மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், ஒற்றுமை அரசாங்கத்தின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான உறவு சுமுகமாகவே நீடிக்கிறது என்று துணைப் பிரதமர் அகமது ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுவதன் மூலம், புத்ராஜெயாவில் உள்ள கட்சிகள் அரசாங்க விவகாரங்களைக் கையாள்வதில் தொழில்முறைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாக அம்னோ தலைவர் கூறினார்.

எங்களுக்கு இடையிலான உறவு நன்றாக உள்ளது. நாம் அரசியல்வாதிகளாக இருந்தாலும், அரசாங்க விஷயங்களை நிர்வகிப்பதில் தொழில்முறையாகவே செயல்படுகிறோம், என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

அரசரின் தனிப்பட்ட அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நஜிப்பின் நிபந்தனையுடனான மன்னிப்பை அம்னோ வரவேற்றுள்ளதுடன், அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு ஏதுவாக, அவரது 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த உதவுவதற்காக ஒரு நிதியத்தையும் தொடங்கியுள்ளது.

இருப்பினும், சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்றும், குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டம் மற்றும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படியே தங்களது தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாட்டின் மிக உயர்ந்த சட்டமான கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் மன்னிப்பு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அது சட்டப்பூர்வமானதுதான் என்று அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அசலினா ஒத்மான் சைட், பக்காத்தான் ஹராப்பானுக்கு நினைவூட்டியுள்ளார்.